districts

img

தஞ்சையில் மீன், கருவாடு விலை உயர்வு

தஞ்சாவூர், மே 19- மீன்பிடித் தடைக்காலம் காரணமாக மீன்வரத்து குறைந்துள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில், மீன், நண்டு, கருவாடு உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் மீன்பிடிக்க செல் லாததால், நாட்டுப்படகு மீனவர்கள் கரையோரங்களில் மீன்பிடித்து கொண்டு வருவதை வாங்கிச் செல்ல, பொதுமக்கள், வியாபாரிகள் அதிக ளவு வருகின்றனர்.   இதனால் ஒரு கிலோ 300 ரூபாய்க்கு  விற்கப்பட்ட காளை மீன் 700 ரூபாய்க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட வாவல் மீன் ரூ.800 க்கும், ரூ.150 வரை விற்கப்பட்ட பொடி மீன்கள் ரூ.450 வரையும் விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.200 க்கு விற்கப்பட்ட இறால் ரூ.500க் கும், ரூ.300க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.700க்கும் விற்கப்படுகிறது.  மேலும் போதிய அளவிலான மீன் கள் இல்லாததால் கருவாடு உற்பத்தித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.150 க்கு விற்கப்பட்ட பொடி கருவாடு தற்போது ரூ.400க்கும், ரூ.400 க்கு விற்கப்பட்ட காளைக் கருவாடு, ரூ.600 க்கும் விற்கப்படுகிறது.  கோடை காலத்தில் ஏரி, குளங்களில் பிடிபடும் மீன்களும், பண்ணைகளில் வளர்க்கப்படும் கெண்டை, கட்லா போன்ற மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.