districts

img

86 மாதங்களாக வழங்காத அகவிலைப்படி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்

 கும்பகோணம், டிச.29- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி யாற்றி ஓய்வு பெற்றோர் ஊழியர் சங்கம் சார்பில் அக விலைப்படி உயர்வை வழங்க கோரி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு போக்குவரத்துக் கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் தலைவர் ஆர்.கோவிந்த ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி, பொருளா ளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கோட்ட பொதுச்  செயலாளர் மணிமாறன், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச்  செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அன்புமணி ஆகியோர் ஆத ரவாக தெரிவித்து கலந்து கொண்டனர். இதில், 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.  போராட்டத்தில், 86 மாதங்களாக அகவிலைப்படி வழங்காமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க  வேண்டும், பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, பணிக்காலத்தில் மரணமடைந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய  பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய ஒப்ப டைப்பு தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.