districts

img

அடையாள அட்டை வழங்கக் கோரி தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்

கும்பகோணம், நவ.4- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் திருபு வனம் பேரூராட்சிகளில் நூற்றுக்கணக்கான தரைக்கடை வியாபாரிகள் சாலை ஓரங்க ளில் தற்காலிகமாக வியாபாரம் செய்து வரு கின்றனர். இந்நிலையில் அவர்கள் அன்றாடம் தேவையான பொருட்களை குறைந்த லாபத் திற்கு விற்று வாழ்க்கையை நடத்தி வருகின்ற னர். அவர்களது வியாபார முதலீட்டுக்காக வும் தரைக்கடை வியாபாரி என்ற அங்கீகாரத் திற்காகவும் பேரூராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும். வியாபாரம் செய்வதற்கு கடன் வழங்கி உதவிட வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி, திருபுவனம்- திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர்களி டம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். ஆர்ப்பாட்டத்திற்கு தரைக்கடை வியா பாரிகள் சங்க தலைவர் ராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சா. ஜீவபாரதி மற்றும் தரைக்கடை வியாபாரி கள் சங்க செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.