தஞ்சாவூர், நவ.19 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றிய சாதாரணக் கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் தலைமையில் பூக்கொல்லை யில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசுகையில், “முதுகாடு ஊராட்சி சாலை பழுதடைந்துள்ளது. இதுகுறித்து ஏற்க னவே கூட்டத்தில் முறையிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. அதேபோல் ருத்திரசிந்தாமணி குடியி ருப்பு சாலையை சீரமைக்க வேண்டும். சாந்தாம்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக் கப்பள்ளி பழுதடைந்த நிலையில் உள்ளது. குழந்தைகள் ஆபத்தான நிலையில் பள்ளி க்குச் சென்று வருகின்றனர். அந்த கட்டி டத்தை இடித்துவிட்டு புதிதாக அமைத்து தர வேண்டும். நாடியம் பகுதியில் நடைபெறும் எந்த வொரு அரசு விழாக்களுக்கும், தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிப்பதில்லை. அழைப்பும் விடுப்பதில்லை. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்மையில் மின்வா ரியம் சார்பில் நடைபெற்ற ஒரு விழா குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. மூன்றுக் கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் பழுதடைந்து சாயும் நிலையில் உள்ளது. அரு கிலேயே குடியிருப்புகள் உள்ளன. இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரி களிடம் முறையிட்டும் கண்டுகொள்ளாத அலட்சியப் போக்கு உள்ளது. சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையின் முக்கியமான ஊராக சேதுபாவா சத்திரம் உள்ளது. இங்கிருந்து, தூத்துக்குடி, வேளாங்கண்ணி, பேராவூரணி, பட்டுக் கோட்டைக்கு என பல இடங்களில் பாதை பிரி கிறது. நெடுஞ்சாலைத் துறை சார்பில், ஊர் வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரக்காவலசை பகுதி யில் பல இடங்களில் சாலைகள் பழுதடைந் துள்ளன. அவற்றை சரி செய்து தர வேண்டும். ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வேலை திட்டத்திற்கான நிதியை சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும்” என்றனர்.