districts

img

வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர், ஜூன் 10 -  அமெரிக்கா மற்றும் ஆஸ்தி ரேலியா நாட்டிலிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்ட, 3 ஐம்பொன் சிலைகள்  வியாழக்கிழமை மாலை அந்தந்த  கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.  இதையடுத்து சிலைகளுக்கு மாலை அணிவித்து மங்கள வாத்தியங் கள் முழங்க பொதுமக்களும், பக்தர் களும் உற்சாக வரவேற்பு அளித்த னர். தஞ்சாவூர், நாகை, அரியலூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பழமையான கோயிலில் இருந்த ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் கடந்த பல ஆண்டு களுக்கு முன்பு திருட்டு போனது. இதில் 10 சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரி வினர் கண்டுபிடித்தனர்.  இதையடுத்து அந்த சிலைகள் முறைப்படி இந்தியாவுக்கு கொண்டு  வரப்பட்டு, கடந்த ஜூன் 1 ஆம் தேதி புதுதில்லியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிலை கடத்தல் வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில், கடந்த  ஜூன் 6 ஆம் தேதி சிலைகளை காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதை யடுத்து மீட்கப்பட்ட சிலைகளை அந்தந்த கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். வியாழக்கிழமை முதற்கட்டமாக தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம் மன் கோயில் அருகில் உள்ள கைலாச நாதர் கோயிலுக்கு மூன்று ஐம்பொன் சிலைகள் கொண்டு வரப்பட்டன.

அந்த சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த்  முரளி தலைமையில், ஐ.ஜி.தின கரன், எஸ்.பி.ராஜாராமன், ஏடிஎஸ்பி  மலைச்சாமி ஆகியோர் கொண்ட குழு வினர் கொண்டு வந்தனர். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ் தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா  போன்ஸ்லே மற்றும் அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரி கள் முன்னிலையில் சிலைகளை ஒப்ப டைத்தனர். 45 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரி யம்மன் கோயில் அருகே உள்ள கைலாசநாதர் கோயிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை  கடந்த 1966-1977 ஆம் ஆண்டு களுக்குட்பட்ட பகுதியில் காணாமல்  போனது. இந்த சிலை காணவில்லை  என தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரி வினர் தேடி வந்த நிலையில், அமெரிக் காவில் நியூயார்க் நகரில் உள்ள ஏசியா சொசைட்டி மியூசியத்தில் இருந்ததை கண்டுபிடித்து, அதனை மீட்டு கோயிலில் ஒப்படைத்தனர். இதேபோல் வியாழக்கிழமை மாலை புன்னைநல்லூர் மாரியம்மன்  கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அம்மாபேட்டை அருகே தீபாம்பாள் புரம் வன்மீகநாதர் கோயிலிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு மாய மான சிவன்பார்வதி ஐம்பொன் சிலை,  அமெரிக்காவில் உள்ள டேவிட் ஹஸ்லி மியூசியத்திலிருந்து மீட்டு  கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.

நாகப்பட்டினம் சாயவனேஸ்வரர் கோயிலிலிருந்து 196 -ஆம் ஆண்டு  மாயமான குழந்தை சம்பந்தர் ஐம் பொன் சிலையை, ஆஸ்திரேலியா வில் உள்ள நேஷனல் கேலரியி லிருந்து மீட்டு, அந்த சிலையும் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைக் கப்பட்டது. இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் டிஜிபி  ஜெயந்த்முரளி கூறுகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம்  ஆண்டு வரை 22 சிலைகள் மட்டுமே  வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து நிக ழாண்டு தமிழக சிலை கடத்தல் தடுப்பு  பிரிவு போலீஸ் வரலாற்றிலேயே, 10 சிலைகளை ஒரே நேரத்தில் கொண்டு வந்துள்ளோம். இதில் மூன்று சிலைகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவைகள்  11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. வெள்ளிக்கிழமை (ஜூன் 10) அரியலூர் மாவட்டம் சித்தமல்லி வரத ராஜபெருமாள் கோயிலில் விஷ்ணு, ஸ்ரீதேவி ஐம்பொன் சிலைகள் ஒப்ப டைக்கப்பட்டன. தென்காசி முன்றீஸ் வரர் கோயிலுக்கு சொந்தமான இரண்டு துவாரபாலகர் கற்சிலையும்  ஒப்படைக்கப்பட்டு விட்டது” என்றார்.