தஞ்சாவூர், மே 21 - தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலை யத்தில், கைவினை கலை ஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்ப டுத்திக் கொடுக்கும் நோக்கில், தஞ்சாவூர் பாரம்ப ரிய கைவினைப் பொருட் களின் விற்பனையை ஊக்கு விக்கும் விதமாக,புவிசார் குறியீட்டு கைவினைப்பொ ருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இக்கண்காட்சியினை மாநகராட்சி மேயர் சண்.ராம நாதன், ஆணையர் சரவண குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மே 20 அன்று தொடங்கி மே 31 வரை நடைபெறும் இக்கண்காட்சி யில், புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களான பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், தஞ்சாவூர் ஓவியங்கள், நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நெட்டியால் ஆன கை வினைப் பொருட்கள், தஞ்சா வூர் வீணைகள், கருப்பூர் கலம்காரி ஓவியங்கள், நரசிங்கம்பேட்டை நாதஸ் வரம் மற்றும் பல பரிசுப் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ரூ.150 முதல் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான பொருட் கள் விற்பனைக்கு வைக்கப்பட் டுள்ளன. இக்கண்காட்சியில், இடம்பெற்றுள்ள புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்களுக்கு 10 விழுக் காடு சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந் நிகழ்ச்சியில், பூம்புகார் விற் பனை நிலைய மேலாளர் அருண் மற்றும் கைவினைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு நிறு வனமான தமிழ்நாடு கைத் திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம், கடந்த 1973 இல் தொடங்கப்பட்டது. தொன்மையான கலைகளை பாதுகாப்பது, கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. புது தில்லி, கல்கத்தா உட்பட நாடு முழுவதும் 14 விற்பனை நிலையங்களை பூம்புகார் நிறுவனம் நடத்தி வருவ தோடு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பலவகை கண்காட்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.