districts

ராஜராஜசோழன் சதயவிழா: நவ.3 உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர், அக்.27-  மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-ஆவது சதய விழாவை முன்னிட்டு நவம்பர் 3-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-ஆவது சதய விழா நவம்பர் 3- ஆம் தேதி (வியாழக்கிழமை) தஞ்சாவூர் பெரிய கோயிலில் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவ னங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினத்துக்கு பதிலாக நவம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்கள் செயல்படும்” என மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.