districts

img

கும்பகோணம் 34-ஆவது வார்டில் மழைநீர் வடிகால் வாய்க்காலை சீரமைத்திடுக! சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கோரிக்கை

கும்பகோணம், அக்.20. கும்பகோணம் மாநகராட்சி மன்ற உறுப்பி னர் கூட்டம் கும்பகோணத்தில் நடை பெற்றது.  கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவ ணன் தலைமை வகித்தார் துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் செல்வம்  பேசுகையில், ‘‘கும்பகோணம் மாநாக ராட்சிக்குட்பட்ட 34-ஆவது வார்டு பொன்னி யம்மன் கோவில் தெருவில் உள்ள கழிப்ப றையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் மழையினால் தராசுரம் பொன்னி யம்மன் கோவில் தெரு சிவஜோதி நகர், சிவகாமி நகர், ஆகியகுடியிருப்பு பகுதிக ளில் மழைநீர் சூழ்ந்து வெல்லக்காடாய் உள்ளது இந்நிலையில், மழை நீர் வடிகால் வாய்க்காலான  காருவாய்க்கால் மதில் சுவர் பாதிப்பு ஏற்பட்டு  இடிந்துவிடும் நிலையில் உள்ளது. எனவே, உடனடியாக மழைநீர் வடி கால் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கையை எழுப்பினார்.