districts

img

வினாடி - வினா போட்டியில் வென்ற மாணவிகளுக்கு கைக் கடிகாரம் பரிசு

தஞ்சாவூர், ஏப்.20 - தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட வினாடி - வினா  போட்டியில் வெற்றி பெற்ற  அரசு பள்ளி மாணவி களுக்கு தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  சிவக்குமார் கைக் கடிகா ரத்தை பரிசாக வழங்கி பாராட் டினார்.  தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் எனப்படும்  கற்றல் வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளது. இதில் அடிக்கடி வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி கள் பங்கேற்று அதிக மதிப்பெண் பெற்றனர்.  இந்நிலையில் செவ்வா ய்க்கிழமை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அதிக மதிப் பெண் பெற்ற பேராவூரணி  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவிகள் நிவேதா, ஈஸ்வரி மற்றும் இடையாத்தி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 18 பேருக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினார்.