கும்பகோணம், ஆக.31 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், திருஆருரான் சர்க்கரை ஆலை விவ சாயிகள் சங்கம் சார்பில் ஆலோ சனைக் கூட்டம் தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்க பொறுப்பாளர் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. கரும்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் நாக.முருகேசன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசிய தாவது: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள திருமண்டக்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வராத கரும்பு பணம் முழுவதையும் வழங்க வேண்டும். 7000 விவசாயி களின் பெயரில் வாங்கிய வங்கிக் கடனை திரும்ப செலுத்தி கடன் இல்லா சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, சுமார் ரூ.1000 முதல் ரூ.1500 கோடி வரை மதிப்புள்ள திரு மண்டக்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, ஏ.சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலை ஆகிய இரண்டு ஆலைகளையும் யாருக்கும் தெரியா மல் பேரம் பேசி ரூ.145 கோடிக்கு பெயர் மாற்றம் செய்ய அவசர அவசரமாக ஏற்பாடு செய்து, நிர்வாகத்தை கையகப் படுத்த முயற்சி நடக்கிறது. இந்த முயற்சியை ரத்து செய்து, ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி எடுத்து நடத்த வேண்டும். குறிப்பாக ஒரு விவசாயிக்கு குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் பணம் வர வேண்டும் என்றால், அதில் தற்போது ரூ.1,14,000 தான் தருவேன் என்றும், அதை ஒரு வருடத்தில் நான்கு தவணை யாகவும், அதில் 20 சதவீதம் (சுமார் ரூ.22, 800) தருவதாகவும் கையொப்பம் பெற்றுள்ளனர்.
இதை வழக்கறிஞர் ஒருவர் மூலம் விவசாயிகளுக்கு தெரி யாமல், நோட்டில் கையொப்பம் பெற்றுள் ளனர். மேலும், இதில் சில புரோக் கர்கள் என்ன எழுதினார்கள் என தெரி யாமலே பூர்த்தி செய்து உள்ளனர். இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட சில விவசாயிகளிடம் பொய் சொல்லி கையொப்பம் பெற்று வருகிறார்கள். இதேபோல் கையொப்பம் பெற்று ஆலையை கையகப்படுத்த முயற்சிக்கி றார்கள். மேற்படி புரோக்கர் மூலம் ஆலையை கைப்பற்றி விட்டால், மீதம் உள்ள மூன்று தவணைகளுக்கும் புரோக்கரிடம் விவசாயிகள் கைகட்டி நிற்க வேண்டிய அவலநிலை ஏற்படும். மீதி தொகை கிடைக்குமா, கிடைக்காதா என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. திருஆருரான் ஆலை நிர்வாகம் கரும்பு பணம் கொடுப்பதற்காக, பினாமியாக ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என பல விவசாயிகளின் பெயரில் குறைந்தபட்சம் ரூ.150 கோடி கடன் பெற்றுள்ளது. இதுவரை 7000 விவசாயி கள் பெயரில் கடன் நிலுவையில் உள்ளது. இதில் எந்த கடனும் திருப்பி கட்டப்படவில்லை. மேற்படி கடனை திரும்ப செலுத்தி, விவசாயிகளுக்கு வங்கியில் கடன் இல்லா சான்று பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.