districts

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை

தஞ்சாவூர், பிப்.5 - போக்குவரத்து அலுவலர் வீட்டில்  விடிய விடிய நடைபெற்ற சோதனை யில் கணக்கில் வராத ரூ.5.50 லட்சம் ரொக்கம், தங்க, வைர நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை வட்டாரப் போக்கு வரத்து அலுவலராகப் பணியாற்றி வரு பவர் ஜெய்சங்கர் (55). இவரது வீடு  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையி லுள்ள கிருஷ்ணா நகரில் உள்ளது. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து  சேர்த்ததாகப் புகார் எழுந்தது.  புகாரின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட  லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்கா ணிப்பாளர் ராஜூ தலைமையில் ஆய்வா ளர்கள் சரவணன், பத்மாவதி மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், தஞ்சாவூரில் உள்ள ஜெய்சங்கர் வீட்டுக்கு வெள்ளிக் கிழமை காலை சென்றனர். பின்னர் வீட்டின் முன்புறம் உள்ள கதவைப் பூட்டி  விட்டு சோதனையை தொடங்கினர். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சோத னையிட்டனர். இது தொடர்பாக ஜெய் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தின ரிடமும் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் விசா ரணை நடத்தினர். அதே போல், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் ஜெய்சங்கருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

வீடு மற்றும் பெட் ரோல் பங்க் ஆகியவற்றில் வெள்ளிக் கிழமை தொடங்கிய சோதனை விடிய  விடிய நடைபெற்று, சனிக்கிழமை அதி காலை 4 மணிக்கு நிறைவடைந்தது. சோதனையில் கணக்கில் வராத  ரூ.5.50 லட்சம் ரொக்கம், 100 பவுன்  தங்க நகைகள், வைர நெக்லஸ், வைரத்  தோடு, இரண்டு வங்கிகளின் லாக்கர் சாவிகள் மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை  அதிகாரிகள் கூறுகையில், “தஞ்சா வூரை பூர்வீகமாக கொண்டவர் ஜெய் சங்கர். இவர் நாகை, கடலூர், கும்ப கோணம் போன்ற இடங்களில் வட்டார  போக்குவரத்து அலுவலராக பணி யாற்றி, தற்போது புதுக்கோட்டையில் பணியாற்றி வருகிறார். இவர் மீது வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக வந்த புகாரின் அடிப்படையில் சோத னையிடப்பட்டது. தஞ்சாவூர் கிருஷ்ணா நகரில் உள்ள  சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா, திருச்சி வாழையூரில் உள்ள  பண்ணை வீடு, தஞ்சாவூரில் பெட்ரோல்  பங்க் மற்றும் 5 கார்கள், 100 பவுன் தங்க  நகைகள், வைர நெக்லஸ், வைரத் தோடு, மனைவி பெயரில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள், ஜெய் சங்கர் பெயரில் மூன்று வங்கி கணக்கு கள், இரண்டு வங்கி லாக்கர் சாவிகளும்  கண்டுபிடிக்கப்பட்டன. சோதனையின் போது கணக்கில் வராத ரூ.5.50 லட்சம்  ரொக்கப்பணம் இருந்ததை பறிமுதல் செய்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்புகள் குறித்த அறிக்கை, வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவற்றை கும்ப கோணத்தில் உள்ள கூடுதல் மாவட்ட  குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது” என்றனர்.