தஞ்சாவூர், பிப்.10- மின் ஊழியர்களுக்கு 01.12.2019 முதல் வழங்கிட வேண்டிய ஊதிய உயர்வுக் கான கோரிக்கை பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், தஞ்சாவூர் மின் வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவ லக வாயிலில் மாவட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலை மையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலை வரும், முன்னாள் மாநில பொருளாளருமான து.கோ விந்தராஜூ பட்டியலை வெளி யிட்டு உரையாற்றினார். மாநில துணை தலைவர் எஸ். ராஜாராமன் அதனை பெற்றுக் கொண்டு உரை யாற்றினார். பொருளாளர் எம்.ஆரோக்கியசாமி கூறினார். நிர்வாகிகள் ரவி, சந்தனமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.