districts

img

அரசுப்பள்ளி வாசிப்புத் திறன் பயிற்சி

தஞ்சாவூர், செப்.29- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், இடை யாத்தி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், வாசிப்புத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சிறப்பாக செயல்  பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  இடையாத்தி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் படிக்கும், மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கான வாசிப்புத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  மாணவ, மாணவிகளிடம் வாசிக்கும் திறனை மேம் படுத்தவும், வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும் பல்  வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.  இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.பரமேஸ்வரி தலைமையில், இடைநிலை ஆசிரியர்கள் மா.சங்கிலி பூதத்துரை, ந.அமுதா பிரியதர்ஷினி முன்னி லையில் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் கனிஷா, பிர சோதயா, ருத்ரன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.