தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர் கூட்டம் ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 345 மனுக்களை மக்கள் ஆட்சியரிடம் அளித்தனர்.