தஞ்சாவூர், ஜூன் 16- தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘‘வீட்டுக்கு ஒரு விருட்சம்’’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் தொடர்ச்சியாக, பள்ளி மாணவ-மாண வியர்களுக்கு புதனன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரி வித்ததாவது:- தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில், ‘‘வீட்டு க்கு ஒரு விருட்சம் - ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள்’’ வளர்க்கும் திட்டத் தினை, உலக புவி தினத்தன்று துவங்கி வைத்து, இதுநாள் வரை கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடப் பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்பட்டு வரும் இணைச் செயல் பாடுகளில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகளின் சமூக பணியை ஊக்குவிக்கும் விதமாகவும், இயற்கை நேசிக்கும் விதமாகவும் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணி தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஜூனியர் ரெட்கிராஸ், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய பசுமைப்படை, தேசிய மாணவர் படை மற்றும் சாரண சாரணியர் இயக்கம் சுமார் 1,000 குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதற்கட்ட மாக ஒரு குழுவிற்கு 25 மரக்கன்றுகள் வீதம் சுமார் 25 ஆயிரம் மரக்கன்று களை ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை ஒரு மாதத்திற்குள் நட்டு பரா மரித்திடும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது’’ என்றார். நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) கி.ரங்கராஜன், மாநகர நல அலுவலர் நமச்சிவாயம், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் மரு.ராதிகா மைக்கேல், செயலாளர் முனைவர். ராம் மனோகர், ரெட் கிராஸ் சேர்மன் ராஜமாணிக்கம், பேராசிரியர் வெ.சுகுமார், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பிரகதீஷ், கவின்மிகு தஞ்சை இயக்க இணை செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.