districts

தனியார் பேருந்து நிறுவன முதலீடு மோசடி: மேலாளர் கைது

தஞ்சாவூர், ஏப்.7- தஞ்சாவூர் ராஹத் டிரான்ஸ்போர்ட் என்ற தனியார்  பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர் களின் பல கோடி ரூபாய் முதலீடுகளை நிறுவன உரிமை யாளர் கமாலுதீன் பெற்று கொண்டு, நிறைய லாபம்  கொடுப்பதாகக் கூறி ரூ.400 கோடி மோசடி செய்ததாகக் காவல் துறையில் 6,380 பேர் புகார் செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கமாலுதீ னின் மேலாளர் எஸ்.நாராயணசாமியை (63) திருச்சி பொரு ளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வியாழக்கிழமை  கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனர். 

;