தஞ்சாவூர்/பெரம்பலூர், மார்ச் 2 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி பேரூராட்சி விழா அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான பா.பழனிவேல் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் வெற்றி பெற்ற 18 வார்டுகளின் உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பெரம்பலூர் பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 15 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் சுயேட்சையும், ஒரு இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வர்கள் மார்ச் 2 அன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.