districts

img

பேராவூரணியிலிருந்து அரசுக் கல்லூரி வழியாக நகர்ப் பேருந்து இயக்கம்

பேராவூரணி, மார்ச் 26 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் 1,500 மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். பேராவூரணி நகரிலிருந்து சுமார் நான்கு கி.மீ. தூரத்தில் கல்லூரி அமைந்துள்ளதால் வெளியூர்களிலிருந்து வரும்  மாணவ, மாணவிகள், பேரா வூரணி பேருந்து நிலை யத்தில் இறங்கி நடந்து செல்லும் நிலை இருந்து வந்தது.  கோடையின் கடும் வெயி லில் மாணவர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு  வந்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரா வூரணி சட்டமன்ற உறுப்பி னர் என்.அசோக்குமாரிடம் கோரிக்கை விடுத்திருந்த னர்.  கோரிக்கையை ஏற்று பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் ஏ-1, காலை ஒன்பது மணிக்கு கல்லூரி துவங்கும் நேரத்திலும், மதியம் இரண்டு மணிக்கு கல்லூரி முடியும் நேரத்திலும் இரண்டு நடைகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  நகர்ப் பேருந்து தடம்  எண் பி-96, பேராவூர ணியிலிருந்து அண்ணா நகர், கென்னடி நகர், இந்திரா நகர், சுமை தாங்கி, தூராங்குடி வழியாக பெரு மகளூர் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.  பேருந்து நீட்டிப்பு நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்துகொண்டு இரண்டு பேருந்துகளையும் தொட ங்கி வைத்தார். அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் தமிழ் செல்வன், அரசுக்கல்லூரி முதல்வர் (பொ) ராணி, கிளை மேலாளர் மகா லிங்கம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம்,  பேரா சிரியர் நா.பழனிவேல், பேரூ ராட்சி உறுப்பினர்கள், கைஃபா கார்த்திகேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.