districts

img

பாபநாசம் மக்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருக! மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் மனு

தஞ்சாவூர், நவ.7 - பாபநாசம் பகுதி பொது மக்கள் மற்றும் விவசாயி களின் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றித் தர வலி யுறுத்தி, திங்கள்கிழமை சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில், சிபிஎம் நிர்வாகிகள், விவ சாயிகள், பொதுமக்கள் தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து பேசினர்.  அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், “தஞ் சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி, குப்பைமேடு  பகுதி பட்டியல் வகுப்பு மக் களுக்கு சுகாதார வசதியு டன் கூடிய சமுதாயக் கூடம்  கட்டித்தர, அரசு இடத்தில்  முறைகேடாக அளிக்கப் பட்ட பட்டாவை ரத்து செய்து, இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.  பாபநாசம் பேரூராட்சி யில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில், கழிப்பறை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கி  தர வேண்டும். பண்டார வாடை கிராமத்தில் நிலுவை யின நிலத்திற்கு, உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்கவும், கூட்டுறவு கடன்  பெற சிட்டா அடங்கல் வழங்க வும் வேண்டும்.  வேம்பக்குடி கிராமத்திற்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும்.

கிரா மத்தில் இருந்து புறவழிச் சாலைக்கு செல்லும் இணை ப்புச் சாலையை செப்பனிட வேண்டும். சுடுகாட்டிற்கு செல்வதற்கு சாலை அமைத்து தர வேண்டும்.  பண்டாரவாடை கிராமம் நிலுவை இனமாக உள்ள தால், விவசாயம் செய்யக் கூடிய விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம், கடன், பயிர் காப்பீடு பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு  முன் இருந்த ஆட்சித் தலை வர், விவசாயம் செய்த விவ சாயிகளுக்கு, ‘அரசு வழங் கும் நிவாரணங்களுக்கு தகுதியுடையவர்கள்’ என வட்டாட்சியர் மூலம் சான்று  வழங்கினார். இதன் மூலம்  விவசாயிகள் பயனடைந்த னர். அதே முறையில் மீண்  டும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் சான்று வழங்க வேண்டும்.  பல்வேறு போராட்டங் கள் நடத்தியதன் அடிப்ப டையில், நடைபெற்ற சமா தானப் பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர், கோட்டாட்சி யர் ஒப்புக்கொண்ட கோரிக்  கைகள் நிறைவேற்றப்படா மல் உள்ளன. அதனை நிறை வேற்றி தர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. கோரிக்கைகளை கேட்ட றிந்த ஆட்சியர், அப்போதே தீர்க்கப்பட வேண்டிய விஷ யங்களுக்கு உரிய நட வடிக்கை எடுக்குமாறு அதி காரிகளுக்கு உத்தரவிட் டார். மேலும், மற்ற கோரிக் கைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தார். உடன் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.சிவ குரு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பி.எம்.காதர் உசேன், என்.சரவணன், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முரளி, ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கர், பாபநாசம் குப்பை மேடு பொதுமக்கள், பண்டார வாடை விவசாயிகள் சென்றி ருந்தனர்.