districts

img

சாலையை விரிவுபடுத்த மக்கள் கோரிக்கை

பாபநாசம்,டிச.4-     தஞ்சாவூர் மாவட்டம், அய்யம் பேட்டை - கணபதி அக்ரஹாரம் மெயின் சாலை முக்கியமானச் சாலையாகும். இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை வழியே திருவையாறு, சுவாமி மலை, கும்பகோணம் செல்லலாம். திருவையாறு - கும்பகோணம் சாலையில் ஏராளமான கிராங்கள் உள்ளன.  

அய்யம் பேட்டை மதகடி அருகே இந்தச் சாலை குறுகியது என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்லும் ஊழியர்கள் உட்பட பலரும் சிரமத்திற்கு ஆளா கின்றனர். இதனால் இந்தச் சாலை யை விரிவுபடுத்த வேண்டும் என்று  அப் பகுதி பொது மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.