districts

img

மக்கள் நேர்காணல் முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தஞ்சாவூர்/திருவாரூர், டிச.11 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ வரவேற்றார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை வகித்துப் பேசினார். முகாமில் 99 பயனாளிகளுக்கு, ரூ.11,88,98 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டும், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பேசினார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், பருத்தியூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 47 பயனாளிகளுக்கு ரூ.14,47,739 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் குழந்தை திருமணத்தை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகளை ஆட்சியர் வெளியிட்டார்.