தஞ்சாவூர், மார்ச் 21 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நக ராட்சி பேருந்து நிலையத் தில் நாள்தோறும் நூற்றுக் கணக்கான பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே நேரம் பயணிகள் சிறு நீர் கழிப்பதற்காக, கட்டப் பட்டுள்ள இந்த கழிப்பறை யில் தண்ணீர் வசதி இல்லா மலும், சுத்தப்படுத்தப்படாம லும், பயங்கர துர்நாற்றம் நோய் தொற்று அபாயம் ஏற்ப டும் அளவிற்கு உள்ளது. மேலும், கழிப்பறையின் சுவர் உயரமாக கட்டப்படாத தால் மறைவாக இல்லை. இத னால் பெண்கள், முதிய வர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் கார ணமாக பயணிகள் சாக்கடை ஓரங்களில் உபாதையை கழிக்கின்றனர். பேருந்து நிலையத்திற்கு வரும் பயணி களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இதனை நகராட்சி நிர்வா கம் கண்டு கொள்ளாமல் உள்ளது என குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உடனடி யாக நடவடிக்கை எடுத்து, கழிப்பறையை தினமும் தூய்மை செய்து, ப்ளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். பெண்கள் பயன் பெறும் வகையில் கழிப்பறை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.