districts

img

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

தஞ்சாவூர், ஜூன் 1 - பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு  வரப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.  50 லட்சம் மதிப்பீட்டில் 8 படுக்கைகளு டன், அனைத்து நவீன கருவிகள் வசதி களுடன் கூடிய, முற்றிலுமாக குளிரூட்டப் பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவை, கடந்த சில தினங்களுக்கு முன்பு காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை குத்துவிளக்கு ஏற்றி  அதிதீவிர சிகிச்சைப் பிரிவை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது, நகர்மன்றத் தலைவர் சண் முகப்பிரியா செந்தில்குமார், சுகாதாரப்  பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கே.திலகம், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்பழகன், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.