districts

img

பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடிக்க உத்தரவு: அமைச்சர் தகவல்

தஞ்சாவூர், நவ.6-  தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை யில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 3 போக்குவரத்து வழித் தடங்கள் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமையில் நடைபெற்றது. பேருந்துகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி கொடியசைத்து தொடங்கி வைத் தார். பின்னர் அமைச்சர் கூறுகையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், கல்லணையில் இருந்து  3 புதிய போக்குவரத்து வழித் தடங்களுக் கான பேருந்துகள் ஞாயிறன்று முதல்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  திருக்காட்டுப்பள்ளி பகுதி மக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,  கல்லணை கொள்ளிடம் ஆற்றில் உயர்மட்டப் பாலம் ரூ.90 கோடியில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தில் பொது  போக்குவரத்திற்காக பேருந்து இயக்கம் இல்லாமல் இருந்தது.  இந்நிலையில், பல்வேறு  கோரிக் கைகளின் அடிப்படையில், தடம் எண்:88  திருக்காட்டுப்பள்ளி - திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை பூண்டி,  கோவிலடி, கல்லணை, திருவானைக் காவல் வழியாக ஒரு பேருந்தும், தடம்  எண்: சி.6 செங்கிப்பட்டி - கல்லணை வழி  பாதிரக்குடி, அகரப்பேட்டை, திருக் காட்டுப்பள்ளி பூதலூர் வழியாக திருச் சிக்கு ஒரு பேருந்தும், தடம் எண்:  6பி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத் திலிருந்து, தொண்டராயன்பாடி வழி  புங்கனூர், அய்யனாபுரம், தொண்டரா யன்பாடி வழியாக பூதலூருக்கு ஒரு  பேருந்தும் என மொத்தம் 3 புதிய  பேருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன.  இந்த புதிய வழித்தடங்கள் மூலம்  பொதுமக்கள், போக்குவரத்து நெரிச லின்றி விரைவாக செல்வதற்கு இந்த  பேருந்துகள் உறுதுணையாக இருக்கும்” என்றார்.  முன்னதாக அமைச்சர் செய்தியா ளர்கள் சந்திப்பில் கூறுகையில், “பள்ளி  கட்டிடங்களில் தண்ணீர் வடிவது, ஊறிப் போன சுவர்கள் என பழுதடைந்துள்ள கட்டிடங்கள் அனைத்தையும் இடிக்க உத்தரவிட்டுள்ளோம். பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண் டாம். பள்ளியில் உள்ள சுவிட்ச் போர்டு களை கண்காணிக்க வேண்டும். கிராமப் புற பள்ளிகளில் தண்ணீர் தேங்க கூடாது என வலியுறுத்தியுள்ளோம். இதனை  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம்” என்றார். நிகழ்ச்சியில், திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக கோட்ட மேலாண் இயக்கு நர் ராஜ்மோகன், மாவட்ட ஊராட்சி  குழுத் தலைவர் உஷா புண்ணிய முர்த்தி, பூதலூர் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, அரசு போக்கு வரத்துக் கழக திருச்சி மண்டல பொது  மேலாளர் சக்திவேல், தஞ்சாவூர் கோட்ட மேலாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.