districts

img

பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கல்

தஞ்சாவூர், ஜூன் 13-  தமிழகம் முழுவதும் கோடை விடு முறைக்கு பிறகு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்படும் நாளன்றே புத்தகங்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதையடுத்து பேராவூரணி அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு, விலையில்லா பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி  தலைமையில் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி வரவேற் றார். விழாவில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் மாணவி களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி சிறப்பு ரையாற்றினார்.  நிகழ்ச்சியில் 6 முதல் 10 ஆம்  வகுப்பு வரை பயிலும் 897 மாணவ, மாணவி களுக்கு அனைத்து பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. நிறைவாக உடற்கல்வி ஆசிரியை ரெங்கேஸ்வரி நன்றி கூறினார்.
பாபநாசம்
பாபநாசத்தை அடுத்த உத்தாணி ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விலை யில்லா பாட நூல்கள் வழங்கப்பட்டன. வட்டார கல்வி அலுவலர் தாமோதரன், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 55 மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்களை வழங்கினார்.
மயிலாடுதுறை 
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோ யில் ஊராட்சி ஒன்றியம், மாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடை பெற்ற பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா விற்கு ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர்  தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரி யர் மங்கை, ஊராட்சி மன்ற தலைவர் ராஜ லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி சிறப்புரை யாற்றினார்.