districts

img

திருபுவனம் திகோ சில்க்ஸில் பகுதி நேர மருத்துவமனை திறப்பு அரசு தலைமை கொறடா பங்கேற்றார்

கும்பகோணம், ஜூலை 1- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள  திருபுவனத்தில் பட்டு புடவைக்கு பெயர் பெற்ற திருபு வனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் எனப்படும் திகோ  சில்க்ஸ் இயங்கி வருகிறது. திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம், நலிவ டைந்த நெசவாளர்களுக்கு பல சமூக சேவைகளை செய்து  வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் நெசவா ளர்களின் வசதிக்காக ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திகோ சில்க்ஸ் நிர்வாகத்தின் கீழ் பொது சேவை மையத்தில்  பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பகுதி நேர மருத்துவ மனை திறப்பு விழா  நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலை யில், அரசு தலைமை கொறடா கோவி. செழியன் திறந்து வைத்து பேசினார். மேலும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கத் தின் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம்  நெசவாளர்களின் குழந்தைகள் அதிக அளவில் படிக்கும் திருபுவனம் அரசு  மேல்நிலைப் பள்ளி கட்டிட விரிவாக்கத்திற்கு ரூ.10 லட்சத்திற் கான காசோலையும், திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட் டது. காசோலையை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மேலாண்மை இயக்குநர், திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திருபு வனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாக உறுப்பி னர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.