கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்று. கடந்த ஞாயிறன்று பெய்த மழையால், இச்சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுவிட்டது. ஒருநாள் மழைக்கே இந்த சாலை பள்ளமாகி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.