districts

தனியார் பேருந்து நிறுவனம் மீது ரூ.400 கோடி மோசடி புகார் 35 வாகனங்கள் பறிமுதல்

தஞ்சாவூர், டிச.4 -  தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்த வர் கமாலுதீன். இவர் தஞ்சாவூர், அய்யம் பேட்டை, பாபநாசம் பகுதியில் தனியார் பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங் களுக்கு ஆம்னி பேருந்தை இயக்கி வந்தார். இந்த தனியார் பேருந்து நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் மாதந்தோறும் ஈவுத்தொகை வழங்குவதாக கமாலுதீன் அறி வித்தார். அதன்படி இந்நிறுவனத்தில் ஏராள மானோர் பணத்தை முதலீடு செய்தனர். இதற்கிடையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கமாலுதீன் இறந்துவிட்டார். மேலும்,  பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்தவர் களுக்கு ஈவுத்தொகை உள்ளிட்ட முதலீடு தொகை ஏதும் திருப்பி வழங்கவில்லை.  இதனால், பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு  அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனியார் பேருந்து நிறு வனம் ரூ.400 கோடி வரை மோசடி செய்த தாக இதுவரை 6,380 பேர் புகார் அளித்துள்ள னர். புகாரின் அடிப்படையில் இந்நிறுவனத் துக்கு சொந்தமான மற்றும் கமாலுதீன், அவ ரது குடும்பத்தினர் பெயரில் வாங்கப்பட்ட 154 வாகனங்களில் இதுவரை 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  மேலும் 119 வாகனங்களை பறிமுதல்  செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

;