கும்பகோணம், மார்ச் 8- நோட்டு மற்றும் நாணயம் வாரத்தை முன்னிட்டு நாச்சியார்கோவில் சிட்டி யூனியன் வங்கி கிளையில் கிழிந்த மற்றும் அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளாக நாணயங்களாக வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை, வங்கியின் உதவி மேலாளர் உமா மகேஸ்வரி துவக்கி வைத்தார். ஆர்பிஐ மேலாளர் ஹரி கிருஷ்ணன், துணைப் பொது மேலாளர் கணேசன், முதுநிலை மேலாளர் அன்பழகன் நாச்சியார் கோவில் கிளை மேலாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.