districts

img

அரிய கையெழுத்துச் சுவடித்துறையின் கள ஆய்வில் கிடைத்த அரிய தாள்சுவடி

தஞ்சாவூர், பிப்.5 - திருஅருட்பிரகாச வள்ளலார் படைப்புகள் (சுவடிகளும் பதிப்புகளும்) என்ற தலைப்பில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வை, அரிய கையெழுத்து சுவடித்துறையில் செய்து வரும் ஆய்வாளர் வீ. கௌசல்யா, தனது கள ஆய்வில் அரிய கையெழுத்துச் சுவடியைத் திரட்டி உரிய வழியாக, அரிய கையெழுத்துச் சுவடித்துறையில் வழங்கினார். இந்த ஆய்வாளரை, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பாராட்டினார். இச்சுவடித் தொகுப்பில் இலக்கண வழக்கப்பாடு அறிவுறுத்தும் பத்திரிகை, அனுஷ்டான விதி, பூவரங்க முதலியார் தொகுத்த கவிகள், குலோத்துங்க சோழன் கோவை (ஒட்டக் கூத்தர்), நியாய சாஸ்திரம் 16 - பதார்த்தங்கள்- நிரூபணச்சுருக்கம்) குவலயாநத்தம், அருணகிரிப் புராணம், திருக்கழுக்குன்றக் கோவை (சோமசுந்தரம் பிள்ளை) உலகம்மை கலித்துறை அந்தாதி (நமச்சிவாயப்புலவர்) மாயாப் பிரபாபம், மனக்கொன்றை அந்தாதி, சௌந்தர நவமணிமாலை, மகழ்மாக் கலம்பகம் முதலியன உள்ளன. இச்சுவடியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய முனைவர் இரா.பாண்டுரங்கன் பெயரில், இச்சுவடி அரிய கையெழுத்துச் சுவடித்துறை ஆவணப் பதிவேட்டில் பதியப்பட்டது. அரிய கையெழுத்துச் சுவடித்துறைத் தலைவர் முனைவர் த.கண்ணன் உடனிருந்தார்.