districts

அக்.11 அஞ்சல் தலை சேகரிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும்: தபால்துறை தகவல்

தஞ்சாவூர், அக்.9 - அக்.11 (செவ்வாய்க்கிழமை) அஞ்சல் தலை சேகரிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என தபால்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பில், “தேசிய அஞ்சல் வார விழா, தஞ்சை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அக்.9 தபால் தினமாகவும், அக்.10 ஆம் தேதி நிதி வலுவூட்டல் தினமாகவும், அக்.11 ஆம் தேதி அஞ்சல் தலை சேகரிப்பு தினமாகவும், அக்.12 ஆம் தேதி கடிதங்கள் தினமாகவும், அக்.13 ஆம் தேதி சாமானியர் நல்வாழ்வு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்திய அஞ்சல் துறை சேமிப்பு வங்கி சேவை, காப்பீட்டு சேவை, மணியார்டர் சேவை, புகைப்படத்துடன் கூடிய முகவரி சான்று, வணிக அஞ்சல், இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க், உலகம் முழுவதும் பார்சல் அனுப்பும் வசதி, ஆதார் சேவை உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கி வருகிறது. இதை வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என  கூறப்பட்டுள்ளது.