districts

img

சாஸ்த்ரா நிறுவனம் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டு மனைப்பட்டா வழங்குக! விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியரிடம் மனு

தஞ்சாவூர், ஜூன் 30-  சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சட்டவிரோத மாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்டு, குடிமனை இல்லாத, கிராமப்புற விவ சாயத் தொழிலாளர்களுக்கு, பட்டாவுடன் குடிமனை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ ஏ.லாசர், மாநிலச் செயலாளரும், கந்தர்வகோட்டை எம்எல்ஏவுமான எம்.சின்னத்துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் கே. பக்கிரிசாமி, மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், விதொச மாநிலக் குழு உறுப்பினர் சி.நாகராஜன், மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், சாஸ்திரா நிறு வனம் தமிழக அரசு திறந்தவெளி சிறைச் சாலைக்காக ஒதுக்கிய 31 ஏக்கர் நிலம் மற்றும் பலவகை புறம்போக்கு நிலம் 24 ஏக்கர் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 55 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடத்தை கட்டி உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டுமென நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  எனவே, தமிழக அரசு, இந்த இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்” என வலியுறுத்தி தஞ்சாவூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.