தஞ்சாவூர், மே 1 - தஞ்சாவூர் அருகே பட்டியலின இளம்பெண் சாதி ஆதிக்க வெறியர் களால் கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: “தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் சாதி ஆதிக்க வெறியர்களால் கொடூரமாக கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட் டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு வன் மையாக கண்டிக்கிறது. அந்த இளம்பெண் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் ஊருக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து ஊரைச் சேர்ந்த, சாதி ஆதிக்க சமூகத்தை சேர்ந்த கொடிய ரசன் என்பவர், பேருந்துக்காக நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை ஊரில் விட்டு விடுவதாக அழைத்துக் கொண்டு, வேறு வழியில் சென்று வல்லம் குவாரிக்கு அருகில் கொண்டு சென்று உள்ளார். வர மறுத்த பெண்ணை மிரட்டி அடித்து, செல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய துடன், தன் நண்பர்கள் மூவரை வர வழைத்துள்ளார்.
அவர்களும் இளம் பெண்ணை கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் இரவு 12 மணிக்கு பிறகு, கும்பலைச் சேர்ந்த ஒருவன், தனது இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு அருகில் கொண்டு போய் விட்டுள்ளான். இளம் பெண்ணின் பெற்றோர் தக வலறிந்து, பயந்து போய் செய்வத றியாத நிலையில், ஊரில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமியிடம் கூறியுள்ளனர். அவர், “இதை பெரிதுபடுத்த வேண் டாம். உன் மகளுக்கு திருமணம் ஆக வேண்டும். வெளியே தெரிந்தால் அவ மானம், பேசித் தீர்த்துக் கொள்ள லாம் என்று பஞ்சாயத்து பேசி அலட்சி யப்படுத்தி உள்ளார். இளம்பெண்ணின் சகோதரியின் கணவர் மூலம் 15 நாட்கள் கழித்து வல்லம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரை பெற்ற உடன் காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் உடனடியாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கள், அதற்கு துணை போன வேலுச் சாமி உட்பட அனைவரையும் கைது செய்துள்ளனர். இதில் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்தது குறிப் பிடத்தக்கது. அதே நேரத்தில், நகரத்திற்கு வேலைக்கு வந்து செல்லும் இளம் பெண்களுக்கு இத்தகைய மோச மான கொடூர பாலியல் வன்கொடுமை நடப்பது என்பது, இளம் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. இத்தகைய மோசமான கொடூர குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, குறுகிய காலத்தில் காவல்துறை உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். இதேபோல் பாலியல் வன்கொ டுமை நடக்காமல் இருக்க, விழிப்பு ணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை களை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் செய்திட வேண்டும். மாவட் டத்தில் செயல்படும் முக்கிய பெண்கள் அமைப்புகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடல் நடத்தி ஆலோச னைகளை பெற வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண் ணின் குடும்பத்திற்கு உரிய பாது காப்பும், உயர்தர மருத்துவ சிகிச்சை யும், உளவியல் ஆலோசனைகளும், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி உரிய நிவார ணமும் பெற்றுத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.