தஞ்சாவூர், பிப்.27 - இமாச்சலப் பிரதேசம் சோலன் என்ற இடத்தில், கடந்த பிப்.14 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்ற 12 ஆவது தேசிய அளவிலான குடோ தற்காப்புக் கலை போட்டியில், தஞ்சை மாவட் டம் திருச்சிற்றம்பலம் பகுதி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 27 மாநிலங்களைச் சேர்ந்த 1,500 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், தஞ்சாவூர் மாவட்ட பயிற்சியாளர் ஆஷா ஷேக் அப்துல்லா தலைமையிலும், தற்காப்புக் கலை பயிற்சியாளர் மற்றும் தஞ்சை மாவட்ட குடோ விளையாட்டு சங்கச் செயலா ளருமான ஷேக் அப்துல்லா மேற்பார்வையில், திருச்சிற் றம்பலம் மாணவர்கள் பங்கே ற்றனர். இதில், விகாஷ், தீனத யாளன் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும், ஹரிபிரி யன், லோகேஷ், லோகேஸ்வ ரன், மாணவிகள் பர்வீன், ரேகா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்று பிப்.23 அன்று ஊர் திரும்பிய மாண வர்களை, பொதுமக்கள், தமிழ்நாடு குடோ விளை யாட்டு சங்கத் தலைவர் மாஸ்டர் டி.கந்தமூர்த்தி, தஞ்சை மாவட்ட குடோ தற் காப்புக்கலை சங்கத் தலை வர் கோபு.சுப்பையன் மற்றும் பலர் வரவேற்றனர்.