கும்பகோணம், ஜன.19- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் (தன் னாட்சி) கணிதவியல் துறையில் முதுகலை 2-ஆம் ஆண்டு பயிலும் மாணவி சி. கலைவாணி. இவர் 2022 டிச.30 முதல் ஜன.2 வரை ஜம்மு காஷ்மீ ரில் நடைபெற்ற 23-ஆவது தேசிய அளவிலான உறை வாள் சண்டைப் போட்டியில் பங்குபெற்று சீனியர் பிரி வில் தங்கப் பதக்கமும், கவாங்கி பாணி (Khawanky Style) பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் புதுதில்லியில் ஜன.4 முதல் 6 வரை நடை பெற்ற 9-ஆவது தேசிய அள விலான தற்காப்பு கலை போட்டியில் பங்கேற்று சீனி யர் பிரிவில் ஸ்பேரிங் பாணி (SPARING STYLE) வெள்ளிப் பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். பதக்கங்களை வென்ற மாணவி கலைவாணியை கல் லூரி முதல்வர் நா.தனராஜன் ஆகியோர் பாராட்டினர்.