districts

img

நம்பிவயல் தோழர் அய்யாவு படத்திறப்பு

தஞ்சாவூர், மார்ச் 8 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நம்பிவயல் கிராமத்தில் மறைந்த மூத்த தோழர்  அய்யாவு படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  பட்டுக்கோட்டை தாலுகா முன்னணி கட்சி ஊழியரும், கட்சி நடத்திய பல்வேறு போ ராட்டங்களில் பங்கேற்ற வரும், பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றியச் செய லாளரும், முன்னாள் மாவ;l டக் குழு உறுப்பினருமான தோழர் நம்பிவயல் அய்யாவு கடந்த பிப்ரவரி மாதம் கால மானார்.  அன்னாருடைய படத் திறப்பு நம்பிவயல் கிரா மத்தில் சிபிஎம் பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலா ளர் எஸ்.கந்தசாமி தலை மையில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை படத்தை திறந்து வைத்து பேசினார்.  சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.மனோகரன், எஸ்.தமிழ்ச்செல்வி, பி.செந்தில்குமார், எம்.செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு, மெரீனா ஆறுமுகம், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலை வர் வழக்குரைஞர் ராம சாமி, அதிமுக நிர்வாகி மலை அய்யன், விடுதலை சிறுத் தைகள் கட்சி ஆதவன், திமுக  வழக்கறிஞர் செல்வராஜ் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். கட்சி ஒன்றி யக்குழு உறுப்பினர்கள், நம்பிவயல் கிளைச் செயலா ளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.