districts

img

திரு ஆரூரான் சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளில் தமிழக அரசு ஏன் தலையிடவில்லை? பெ.சண்முகம் கேள்வி

கும்பகோணம், டிச.24- தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா திருமண்டக்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை, விவசாயிகளின் கரும்பு கொள்முதருக்கான நிலுவைத் தொகையை முழுமையாக வட்டியுடன் வழங்கவும் விவசாயிகளுக்கு தெரியா மல் மோசடியாக விவசாயிகளின் பெயரில் வங்கி கடன் பெற்றதை திரும்ப  செலுத்தி விவசாயிகள் பெயரில் கடன் இல்லா சான்று வழங்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர்  30-ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு  போராட்டம் நடைபெற்று வருகிறது.  அதன் தொடர்ச்சியாக விவசாயி களின் 25-ஆவது நாள் தொடர் காத்தி ருப்பு போராட்டத்தை ஆதரித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்  கலந்து கொண்டு பேசினார். அப்போது பெ.சண்முகம் தெரி வித்ததாவது: திரு ஆருரான் சர்க்கரை ஆலை விவ சாயிகள் கொடுத்த கரும்புக்கான நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தெரியாமல் வங்கி நிர்வாகமும்  ஆலை  நிர்வாகமும் மோசடியாக கடன் பெற்றதை திரும்ப செலுத்தி ‘கடன் இல்லாத சான்று’ வழங்க வேண்டும்.

இந்தப் போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகம் ஒரு சில கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தினாலும் தீர்வு  எட்டப்படாமல் உள்ளது வருத்தமளிக் கிறது. இதற்கு தீர்வாக தமிழக முதல்வர்  தலையிட்டு உயர்மட்ட மாநில அதிகாரி களை கொண்டு கரும்பு விவசாயி களின் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கரும்பு விவசாயிகளின் கோரிக்கை யினால் தமிழக அரசிற்கு நிதி ரீதியாக  செலவு இல்லாத போது, ஏன் விவசாயி களின் பிரச்சனையில் அலட்சியமும் கால தாமதமும் காட்டுகிறது என்ற  கேள்வி எழுகிறது. எனவே, உடனடியாக  தமிழக அரசு இதில், தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும்.   இவ்வாறு அவர் தெரிவித்தார் காத்திருப்பு போராட்டத்தின் தலை வர் முருகேசன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தங்க.காசிநா தன், தவிச மாவட்டத் தலைவர் செந்தில் குமார், பொருளாளர் எம்.பழனி யய்யா, வி.ச நிர்வாகிகள், தொழிற்சங்க  தலைவர் ஆர்.மனோகரன், வலை தளக்  குழு ஆர்.கலைச்செல்வி, என்.சர வணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.