கும்பகோணம், ஜன.13- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவி லாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அன்னை கல்வி குழும தலைவர் டாக்டர் மு.அன்வர் கபீர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சீ.பொ.மாணிக்கவாசகி தொடங்கி வைத்தார். அன்னை கல்வி குழும செயலாளர் ஹுமாயூன் கபீர், நிர்வாக அதிகாரி கே.ரவி, செயல் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்ட னர். மாணவர்களுக்கு கோலப்போட்டி மற்றும் சமையல் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில், வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.