districts

பள்ளி-கல்லூரிகளில் கண்காணிப்பு குழுக்கள்

கும்பகோணம், ஏப்.6- கல்வி நிலையங்களில் தொடரும் பாலி யல் வன்கொடுமைளைத் தடுக்க  அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் ஐசிசி  (பள்ளி-கல்லூரி அளவிலான கண்கா ணிப்புக்குழு) கமிட்டி அமைக்க வேண்டு மென இந்திய மாணவர் சங்கத்தின் மாண விகள் மாநாடு வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்  கும்ப கோணத்தில் நடைபெற்ற மாணவிகள் மாநாட்டிற்கு மாவட்டத் துணைத்தலைவர் சுருதி தலைமை வகித்தார்  சூர்யா வர வேற்றார் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கார்த்திகாதேவி, மாவட்டச் செயலாளர் சந்துரு ஆகியோர் மாநாட்டின் நோக்கம் குறித்துப் பேசினர். மணிகண்டன் நன்றி கூறினார்.  இந்த மாநாட்டில்  21 பேர் கொண்ட உப குழு தேர்வு செய்யப்பட்டது. கண்வீனராக சுருதி, துணைக் கண்வீனராக அபிநயா,  சூர்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கல்வி நிலையங்களில் தொடரும் பாலி யல் வன்கொடுமைகளைத் தடுக்க அனைத்துப் பள்ளிக் கல்லூரிகளிலும் ஐசிசி  (பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான கண்கா ணிப்புக்குழு) கமிட்டியை அமைத்து மாண விகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிப் பாடப் புத்தகங்களில் உளவியல் ரீதியான கருத்துக்களை இணைக்க வேண்டும். கிராமப்புற மாணவி களின் கல்வியை உறுதிப்படுத்த போக்கு வரத்து வசதியை அதிகப்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.