தஞ்சாவூர், ஜூன் 12 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஆவணம் - பெரியநாயகி புரம் ஊராட்சியில் பணி ரெண்டா குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் அள வீடு செய்ததால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். சுமார் 27 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த குளத் தின் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது. வரத்து வாய்க்கால் மற்றும் கரை ஓரங்களில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டதால் பாசன வசதி குறைவாகி விவசாய பணிகள் பாதிக் கப்பட்டன. இதுகுறித்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து, பேரா வூரணி வட்டாட்சியர் சுகு மார் உத்தரவின்பேரில் பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியா ளர் பிரசன்னா மற்றும் அதி காரிகள் குளத்தை அள வீடு செய்து ஆக்கிரமிக்கப் பட்ட இடங்களை அடை யாளப்படுத்தியுள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். அளவீடு செய்த இடத் தில் கால தாமதப்படுத்தா மல் உடனடியாக ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.