districts

மே 14 பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

மயிலாடுதுறை/தஞ்சாவூர், மே 11 -   உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் ஒவ்வொரு மாதத்திலும் இரண் டாவது சனிக்கிழமைகளில் நடத்த அரசு  அறிவுறுத்தியதை தொடர்ந்து, மயிலாடு துறை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் துறையால் மே 14 அன்று கீழ்க்கண்ட கிரா மங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள்  குறைதீர் நாள் முகாம் நடத்தப்பட உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்கள் குறைதீர் நாள் முகாம் பின்வரும் விவரப்படி குறிப்பிடப்பட்ட கிராமங்களில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தில் மே 14 ஆம்  தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி  வரை மயிலாடுதுறை வட்டம், பூதங்குடி கிரா மம், தரங்கம்பாடி வட்டம், கிளியனூர் கிரா மம், சீர்காழி வட்டம், ஓதவந்தான்குடி கிராமம்  மற்றும் குத்தாலம் வட்டம், வில்லியநல்லூர் கிராமங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சி யர் (கு.பொ.வ) மற்றும் வட்ட வழங்கல் அலு வலர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட குறைதீர்வு நாள் முகாம் நடைபெறும் கிராமங்களில் உள்ள பொது மக்கள் அனைவரும் தங்களது நியாய விலைக்  கடைகளின் செயல்பாடுகள், அத்தியா வசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள், கைப்பேசி எண் மாற்றம்,  குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர்  நீக்கல், கடை மாற்றம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற  கோரிக்கைகளை நியமனம் செய்யப்பட்டு உள்ள அலுவலர்களிடம் மனுக்கள் மூலமாக தெரிவித்து குறைகளை தீர்வு செய்து பயன்  பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  இரா.லலிதா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, குறைபாடுகள் ஏதுமிருப்பின் தொடர்புடைய, வட்ட வழங்கல் அலுவலகத்தில், வட்ட வழங் கல் அலுவலரிடம் மனுக்களை அளித்துப் பயன் பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.