தஞ்சாவூர், செப்.30 - தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தொழில் நெறி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் முனைவர் மா.விஜயா, துணைமுதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் எஸ்.ரமேஷ்குமார் பங்கேற்றார். அப்போது அவர், அரசு வேலைவாய்ப்பு பெற மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்தும், டிஎன்பிஎஸ்சி, எஸ்.எஸ்.சி, பி.ஓ போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறும் வழிமுறைகள் குறித்து மாண வர்களிடையே விளக்கிப் பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அதிகாரி ஜி.குழந்தைவேலு, எந்தந்த துறை களில், எவ்வாறு வேலைவாய்ப்பு பெறுவது குறித்து உரையாற்றினார். முன்னதாக உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் இரா. இராஜ குமார் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வீ.வெற்றிவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.