தஞ்சாவூர், ஜன.7 தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2021-22 ஆம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து 73 கிராம ஊராட் சிகளில் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டதின் மூலம் நடப்பு ஆண்டில் தேர்வு செய்த கிராம ஊராட்சி பகுதிகளில் வேளாண்மை, தோட்டக் கலை மற்றும் பொறியியல் பட்டம் பெற்ற 21- 40 வய துக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இல்லாத சிறந்த கணினி புலமையுள்ள பட்ட தாரிகள் 8 நபர்கள் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட வழிவகை செய்யப்படுகிறது.
இதன் மூலம் அக்ரி கிளினிக் அமைக்கவும் மற்றும் வேளாண் தொழில் சார்ந்த இடுபொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை நிலையம் அமைக்க உரிய கட்டிட வசதி யுடன் குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் முதலீட்டில் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட தகுதி யான வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் பொறியி யல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு நகல், வங்கியில் கடன் உதவி பெற்று திட்டம் தொடங்குபவர் எனில், அதற்குரிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பங் கள் மற்றும் திட்ட அறிக்கையை 12.1.2022 தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், காட்டுதோட்டம், தஞ்சா வூர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.