பேராவூரணி, பிப்.3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மணக் காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், வியாழக்கிழமை பெய்த மழையால் மாண வர்கள் அமர வகுப்பறை இல்லாத காரணத்தால் 6 லிருந்து 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள், ஆய்வக வசதி இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இப்பள்ளியில், 6 வகுப்ப றைகள் மட்டுமே உள்ளது. அதிலும் இரண்டு வகுப்பறை கள் மழைக்காலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளது. வியாழக்கிழமை பெய்த மழையில், அமர வழி யில்லாமல் 6-9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர். எனவே, உரிய வகுப்ப றைகளையும், ஆய்வக, ஆசிரியர்கள் வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதலமைச்சருக்கு மணக்காடு அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வட்டாரச் செய லாளர் வீ.கருப்பையா கூறு கையில், ‘‘கல்வி அமைச் சர் பொறுப்பு மாவட்டத்தில், அரசுப்பள்ளி இந்த நிலை யில் உள்ளது. எனவே, தஞ்சை ஆட்சியர் உடனடி யாக நேரடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.