தஞ்சாவூர், ஜூன் 10- அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) 12 ஆவது பட்டுக்கோட்டை கிளை மாநாடு கிளைத் தலைவர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது. கோட்ட பொதுச் செயலாளர் ஜி.கோ பாலகிருஷ்ணன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். எஸ்.ரமேஷ் கண்ணா வரவேற்றார். மண்டலக் குழு உறுப்பினர் பி.வேலுச்சாமி தொடக்க உரையாற்றினார். மாநிலத் தலைவர் அ. பூவலிங்கம் கருத்துரை வழங்கினார். அமைப்பு தின வணிகப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேற்கு கோட்டத் தலைவர் பி.ராஜேந்திரன் பரிசளித்து உரையாற்றினார். கடந்த 23 வருடமாக எம்.டி.ஆர்.டி தகுதி பெற்ற ஜெ.சரவணனுக்கு கிழக்கு கோட்டத் தலைவர் அன்பு நடராஜன் பரிசளித்து வாழ்த்திப் பேசி னார். கிழக்கு கோட்டச் செயலாளர் ஆர்.கருணா நிதி லிகாயும் - சிஐடியுவும் என்ற தலைப்பில் பேசினார். கோட்ட தலைவர் பி.தங்கமணி புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்திப் பேசி னார். கிளைத் தலைவராக எம்.சுந்தரராசு, செயலா ளராக எம். பஞ்சாட்சரம், பொருளாளராக எஸ்.நீல கண்டன், துணைத் தலைவராக எஸ்.ரகுபதி, இணைச் செயலாளராக எஸ்.ரமேஷ்கண்ணா, கோட்ட குழு உறுப்பினர்களாக வி.லதா, டி.தமிழ்மணி, தணிக்கையாளர்களாக ஆர்.திரு நாவுக்கரசு, வி.சண்முகசுந்தரம் மற்றும் 35 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். முகவர்களுக்கு குழுக் காப்பீடு, முகவர்களின் முகவாண்மைக் காலம் வரை (வயது வரம் பின்றி) வழங்க வேண்டும். தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பீமா ரத்னா போன்ற பாலிசிகளை முகவர்கள் விற்க முழு அனுமதி வழங்குவது, முகவர் விரோதப் போக்கை இனிவரும் காலங்களில் நடைமுறைப்படுத்து வதை எல்ஐசி நிர்வாகம் தவிர்க்க வேண்டும். பாலிசிதாரர்களுக்கு பாலிசி மீதான கடன் வழங்கும் போது கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும். கடனுக்கான வட்டியை செலுத்த பாலிசிதாரருக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை நினைவூட்டுக் கடிதம் அனுப்ப வேண்டும். கொரோனாவுக்காக வழங்கிய முன்பணத்தை பிடித்தம் செய்வதை நிறுத்தி, உடனடியாக தள்ளு படி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் என்.ராஜா நிறைவுரை யாற்றினார். செயற்குழு உறுப்பினர் டி.மதியழகன் நன்றி கூறினார்.