districts

img

திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் “இசைவனம்” தொடக்கம்

தஞ்சாவூர், மே 11 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு வனத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரி யம், தஞ்சாவூர் மாநகராட்சி கவின்மிகு தஞ்சை இயக்கம்  தன்னார்வ சேவை அமைப்பு  ஆகியவற்றின் சார்பில் “இசை வனம்” என்னும் இசைக் கருவிகள் தயா ரிக்கும், மரங்கள் வளர்க் கும் திட்டத்தை, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், மரக்கன்று களை நட்டு செவ்வாய்க் கிழமை தொடங்கி வைத்தார்.  பாரம்பரிய இசைக்கருவி கள் தயாரிப்பில் தனித் தன்மை கொண்ட பலவகை மரங்கள் உள்ளன. பலா  மரத்தின் மூலம் வீணை, மிருதங்கம், தவில் செய்யப் படுகிறது. அதேபோல் ஆச்சா மரம் மூலம் நாதஸ்வர மும், மூங்கில் மரத்தில் புல்லாங்குழல், திருவாச்சி, பூவரசு, வாகை, வேம்பு,  குமிழ், தேக்கு போன்ற பல்வேறு மரங்கள் மூலம்  வேறு பல இசைக்கருவி களும் உருவாக்கப்படுகின்றன.  எனவே, இசைக்கருவி கள் தயாரிக்கும் மரக் கன்றுகளை இசைக்கல்லூரி வளாகத்தில் நட்டுவைத்து வனமாக பராமரிக்க திட்ட மிடப்பட்டது. இதையொட்டி திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் இசைக் கருவிகள் தயாரிக்க பயன்படும் மரக்கன்றுகள் நடப்பட்டன.  இந்நிகழ்ச்சிகளில், அரசு  இசைக் கல்லூரி முதல்வர் உமாமகேஸ்வரி, திருவை யாறு ஒன்றிய குழு தலை வர் அரசாபகாரன், நீர்வளத் துறை உதவி பொறியா ளர் எஸ்.யோகேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் உடனிருந்தனர்.