districts

img

குருவிக்கரம்பை கூட்டுறவு சங்கம் நகைகளை திருப்பித் தரவில்லை விவசாயிகள் சங்கம், பயனாளிகள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர், அக்.1 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குருவிக் கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 39 பயனா ளிகளுக்கு தமிழக அரசால்  நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பய னாளிகளுக்கு இதுவரை நகை திருப்பி வழங்கப்பட வில்லை.  இதையடுத்து, நகை களை திருப்பித் தர வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் தலைமையில் பயனாளிகள் பல கட்டங்க ளாக போராட்டம் நடத்தி னர். இந்நிலையில், வட்டாட் சியர் த.சுகுமார் தலைமை யில் செப்.22 அன்று நடை பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில், செப். 28  ஆம் தேதிக்குள் நகை பய னாளிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என கூட்டு றவுத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
காத்திருப்பு போராட்டம் 
இந்நிலையில் உறுதி யளித்தபடி செப்.28 ஆம் தேதி பயனாளிகளுக்கு நகை  திருப்பி வழங்கப்படாததைக் கண்டித்து, வெள்ளிக் கிழமை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 50 -க்கும் மேற்பட்ட பயனா ளிகள் மற்றும் விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ். வேலுச்சாமி, வீ.கருப் பையா, கோ.ராமசாமி தலை மையில் தொடர் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமாதானப் பேச்சுவார்த்தை 
தகவல் அறிந்து வந்த  கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் சுகி.சுவாமி நாதன், பேராவூரணி காவல்  ஆய்வாளர் செல்வி ஆகி யோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இரண்டு கட்டமாக சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் மற்றும் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசுத் தரப்பில், கூட்டுறவு சார்பதி வாளர் மற்றும் கள அலுவலர் சின்னப்பொண்ணு, கள அலுவலர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.  இதையடுத்து கூட்டுறவு துணை பதிவாளர் சுகி.சுவாமிநாதன், “தான் பொறுப் பேற்று இரு தினங்களே ஆவதால், இதுகுறித்து முழு வதுமாக தகவல் தெரிந்து கொள்ள இரண்டு நாள் கால  அவகாசம் வேண்டும். இரண்டு நாளில் நகைகள் திருப்பித் தரப்படும்” என  எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்தார். இதனை ஏற்றுக் கொண்டு தொடர் காத் திருப்பு போராட்டம் தற்காலி கமாக கைவிடப்பட்டது.

;