கும்பகோணம், ஜூலை 19 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூரை அடுத்த மதகு சாலையை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி மகன் ஆகாஷ் (24), சேகர் மகன் மஜ்னு என்ற மனோஜ் (23), கார்மே கன் மகன் அப்பு என்ற ராஜேஷ் (22), வெங்கட்ரா மன் மகன் கொளஞ்சிநாதன் (34) ஆகிய நான்கு பேரும், திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் மதகு சாலை கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர். நால்வரும் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, நள்ளிரவு ஒரு மணி யளவில் தண்ணீர் கரை புரண்டு வந்தது. இதனை எதிர்பார்க்காத நான்கு பேரும் அங்கு உள்ள மணல் திட்டில் ஏறி நின்று கூச்ச லிட்டுள்ளனர். அப்போது கரையில் இருந்தவர்கள் இதுகுறித்து திருவிடை மருதூர் தீயணைப்பு நிலை யத்திற்கும், பந்தநல்லூர் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து தீய ணைப்பு துறையினர் வருவ தற்குள் தண்ணீர் வரத்து அதிகமானதால் கொளஞ்சி நாதனை மட்டும் மீட்டனர். ஆனால் ஆகாஷ், மஜ்னு (எ) மனோஜ், அப்பு (எ) ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டனர். அவர்களை தீய ணைப்பு துறையினர் தீவிர மாக தேடி வருகின்றனர். மேலும் கூடுதல் ஆட்சி யர் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுத்து வருகின்ற னர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் குளிக்கவோ, மீன்பிடி வேலைகளில் ஈடுபடவோ கூடாது என அறிவிக்கப்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது.