districts

காரைக்குடி - மயிலாடுதுறை ரயில் குறிப்பிட்ட நிலையங்களில் நின்று செல்லும் தென்னக ரயில்வே அறிவிப்பு

தஞ்சாவூர், ஏப். 29 - காரைக்குடி - மயிலாடு துறை வழித்தடத்தில் இயக் கப்படும் டெமு எக்ஸ்பிரஸ் ரயில் புதிதாக குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறி வித்துள்ளது.  காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை அறந் தாங்கி, பேராவூரணி, பட்டுக் கோட்டை, திருவாரூர் வழி யாக இயக்கப்படும் டெமு  எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-06197 /98) தற்போது புதிதாக  ஒட்டங்காடு, வாளரமா ணிக்கம், கண்டனூர் - புது வயல் ஆகிய ரயில் நிலை யங்களில், மே 6 ஆம் தேதி முதல் 1 நிமிடம் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  இதுகுறித்து பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணி கள் நலச் சங்கத்தின் தலைவ ரும், திருச்சி கோட்ட ரயில்  உபயோகிப்போர் ஆலோ சனைக் குழு உறுப்பினரு மான என்.ஜெயராமன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், தென்னக ரயில்வேயின்  இந்த அறிவிப்பால், இப்பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் பெருமளவில் பயனடைவர். பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல ஒரு  நிமிடம் ரயில் நின்று செல்லும்  என்பதனை சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம் என  தெரிவித்துள்ளார்.