districts

img

மூவேந்தர் பள்ளியில்  காமராஜர் பிறந்த நாள் விழா

தஞ்சாவூர், ஜூலை 17 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் -  அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காம ராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வழக்குரைஞர் அரிமா வி.ஏ.டி.  சாமியப்பன் தலைமை வகித்தார். மூவேந்தர் அறக்கட்டளை செயலா ளர் இ.பி.ஏகாம்பரம், பொருளாளர் ஆர்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் ஐ.பிலவேந்திரராஜ் வரவேற் றார். பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.கணேசன் காமராஜரை பற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி என  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு முடிவில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் கணித ஆசிரியர் எஸ்.ரெங்க ராஜன் நன்றி கூறினார். அனைத்து ஆசிரியர்-ஆசிரியைகள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

;